Facebook Page

6ம் வகுப்பு தமிழ் : சிறகின் ஓசை வினா - விடைகள்

சிறகின் ஓசை

6ம் வகுப்பு சிறகின் ஓசை


வலசை போதல்

  • பறவைகள் இடம் பெயர்தலை 'வலசை போதல்' என்பர்.
  • நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
  • பொதுவாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன.
  • காரணம் : உணவு, இருப்பிடம், தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் இனப்பெருக்கம்.
  • அடிப்படை: நிலவு, விண்மீன் மற்றும் புவியீர்ப்பு புலம்

வலசையின் போது ஏற்படும் மாற்றங்கள்

  • தலையில் சிறகு வளர்தல்
  • இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்

சிறப்பு குறிப்புகள்

  • ஏறத்தாழ, 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சக்திமுத்தப்புலவர் எழுதிய "நாராய், நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலில் உள்ள "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
  • ஐரோப்பாவில் இருந்து செங்கால் நாரைகள் தமிழகம் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிட்டுக்குருவி பற்றிய குறிப்புகள்:

  • தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம்
  • ஆண் குருவியின் தொண்டை பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும். உடல் பகுதி அடர் பழுப்பாக இருக்கும்.
  • பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • கூடுகட்டி வாழும்; கூடு கட்டும் காலங்களில் சப்தமிடும்.
  • கூடு கட்டிய பின் 3-6 முட்டைகள் வரை இடும்.
  • 14 நாட்கள் அடைகாக்கும். 15ம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
  • சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 13 ஆண்டுகள் ஆகும்.
  • இமயமலைத் தொடரின் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
  • உலகச் சிட்டுக்குருவிகள் நாள் : மார்ச் - 20

பறவை மனிதன்:

  • இந்தியாவின் பறவை மனிதர் : டாக்டர் சலீம் அலி
  • இவர் தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு இட்ட பெயர் : சிட்டுக்குருவியின் வீழ்ச்சி

தெரிந்து கொள்வோம்

  • சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை கப்பல் பறவை. இது தரை இறங்காமல் 400 கிலோமீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா கடற்கொள்ளை பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
  • உலகிலேயே நெடுந்தலைவு 22 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும் பறவையினம் - ஆர்டிக் ஆலா
  • பறவை பற்றிய படிப்பு - ஆர்னித்தாலஜி
Print Friendly and PDF

கருத்துரையிடுக

0 கருத்துகள்